News April 3, 2025

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – நள்ளிரவிலேயே ஒப்புதல்

image

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். வக்ஃபு மசோதா நிறைவேறிய பிறகு, இத்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, 40 நிமிடத்திற்குள் ஒப்புதலும் பெறப்பட்டது. விரிவான விவாதம் நடத்தப்படக் கூடாது என்பதற்காகவே நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Similar News

News January 13, 2026

தேனி: 5 பவுன் நகை கொள்ளை; இரவில் மர்மநபர்கள் கைவரிசை..

image

இராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது வீட்டின் அருகிலேயே இவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் அசந்து தூங்கிய நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்றனர். திருட்டு சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நேற்று (ஜன.11) வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 13, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தைக் கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 13, 2026

ஸ்டிரைக் அறிவிப்பு.. தமிழக அரசுக்கு புதிய நெருக்கடி

image

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்தவுடனே ஜன.20-ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!