News August 5, 2024
பிற நாடுகளில் தஞ்சமடையும் அரசியல் தலைவர்கள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்துள்ள நிலையில், உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, உள்நாட்டு கலவரம் காரணமாக அங்கிருந்து இருந்து தப்பி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதைப்போல பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் துபாய்க்கும், பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனிலும் தஞ்சமடைந்தனர்.
Similar News
News January 19, 2026
பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்குறீங்களா.. ALERT!

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான நீர் இருக்கும் என்பதால் அவசியம் இல்லை. அதையும் மீறி அதிகமாக தண்ணீர் கொடுத்தால் குழந்தைக்கு சேரவேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம் என்கின்றனர். 6 மாதங்களுக்கு பிறகு தினமும் 2 – 8 ஸ்பூன் வரை இடைவெளிவிட்டு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கலாம். SHARE.
News January 19, 2026
உங்கள் தலையில் ₹1.94 லட்சம் கடன் சுமை

தேர்தலுக்காக பல இலவசங்கள் அடங்கிய வாக்குறுதிகளை அறிவிக்க DMK, ADMK கட்சிகள் தயாராகிவிட்டன. இதனிடையே, TN-ன் கடன் ₹9.29 லட்சம் கோடி என்றும், ஒவ்வொருவர் மீதும் தலா ₹1.94 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2016-21 ADMK ஆட்சியில் ₹4.80 லட்சம் கோடியாக இருந்த கடன், 4½ ஆண்டு DMK ஆட்சியில் ₹9.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே கவர்ச்சி அறிவிப்புகள் தேவையா என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
News January 19, 2026
பீர் குடித்த இளைஞர்கள் மரணம்!

ஆந்திராவில் போட்டி போட்டுக்கொண்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி சித்தூரை சேர்ந்த 6 இளைஞர்கள் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். இதில் மணிகுமார்(34), புஷ்பராஜ்(26) இருவரும் 19 பாட்டில் பீர் குடித்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


