News March 20, 2024
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை

மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தலையொட்டி, தமிழக காவல்துறை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 28ஏ-வின்கீழ், டிஜிபி, காவல் ஆணையர்கள் உள்பட அனைத்து காவல்துறையினரும் தேர்தல் முடிவு வெளியாகும் வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
பிரேமலதா போடும் டீலிங் தான் என்ன? ஏன் இழுபறி?

2009 லோக்சபா தேர்தலில் கிடைத்த சுமார் 10% வாக்குகளை முன்வைத்து, தற்போது இரட்டை இலக்கத்தில் தேமுதிக தொகுதிகளை கேட்கிறது. ஆனால், அதன் பிறகான தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியே திமுகவும் அதிமுகவும் ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளை ஒதுக்க முன்வருகின்றன. தவெக கூட்டணியிலும் முக்கிய கட்சிகள் இணையவில்லை என்பதால் தேமுதிக கூட்டணி இழுபறி நிலையிலேயே இருந்துவருகிறது.
News February 7, 2026
பாஜகவின் முரட்டு அடிமை EPS: உதயநிதி

முரட்டு பக்தர்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கிறீர்களா என DCM உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடைய முரட்டு அடிமையாக தற்போது EPS திகழ்வதாக கூறிய அவர், அதனால்தான் மத்திய பட்ஜெட்டை அவர் வரவேற்றிருக்கிறார் எனவும் கூறியுள்ளார். மேலும், இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் நிச்சயம் வரும் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் எனவும் பேசியுள்ளார்.
News February 7, 2026
PM மோடி மலேசியா விசிட்.. காத்திருக்கும் புதிய சாதனை!

2 நாள்கள் அரசுமுறை பயணமாக PM மோடி இன்று(பிப்.7) மலேசியா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளிடையே செமிகண்டக்டர், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, PM மோடி வருகையின்போது கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றாக 5 நிமிடங்கள் நடனமாடி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளனர்.


