News October 17, 2025

நீயா நானாவிற்கு தடை கோரி மனு

image

சமீபத்தில் வெளியான ‘நீயா நானா’ தெரு நாய்கள் எபிசோட் வைரலானது. இதனால் தெருநாய்கள் கொல்லப்படுவதாகவும், டிவி விவாத நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பிரகாஷ் காந்த் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். பொதுமேடையில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததில் தவறில்லை. விவாத நிகழ்ச்சிக்கு எப்படி தடை விதிக்க முடியும் என்பதை மனுதாரர் விளக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News

News November 17, 2025

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி அறிவுறுத்தல்

image

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என பெண்கள், வேலையில்லா பட்டதாரிகளை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் கடந்த 10 மாதத்தில் பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புகார்களில் மக்கள் ரூ.20 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆன்லைனில் வரும் பொய்யான தகவலை நம்பி எமாறவேண்டாம்.” என அறிவுறுத்தியுள்ளார்.

News November 17, 2025

2 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. Alert

image

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 17, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!