News May 5, 2024

ஜெயக்குமார் உடலுக்கு திரளானோர் அஞ்சலி

image

மறைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் ஜெயக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

Similar News

News November 12, 2025

பிஹார் தேர்தல்: வாக்குப்பதிவில் புதிய சாதனை

image

பிஹார் தேர்தல் வரலாற்றில், வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக EC ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். 1951-ல் அதிகபட்சமாக 66.9% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 71% வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன், அமைதியான முறையில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தாய்மார்கள் தங்கள் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

News November 12, 2025

இதை சாப்பிட்டால் ஆண்மை குறையும்… உஷார்

image

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: *துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது *அதிக கொழுப்பு உள்ள பால் பொருள்கள் *பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் *சோயா உணவுகள் – இதன் மூலப்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.

News November 12, 2025

டெல்லியில் 50 உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர்

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. டெல்லியில் இதுபோல, ஏற்கெனவே 2005-ல் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு பஸ்ஸில் வெடிகுண்டு இருப்பது குறித்து அறிந்த ஓட்டுநர் குல்தீப் சிங், தன் உயிரை பணயம் வைத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். அதன் பிறகு வெடிகுண்டை தூக்கிவீசும் முயற்சியில் அவர் ஒற்றை கண் பார்வை மற்றும் கை, செவித்திறனை இழந்தார்.

error: Content is protected !!