News November 29, 2024

கடலூர் மக்கள் நாளை வெளியே வர வேண்டாம்

image

“ஃபெஞ்சல்” புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, நாளை பிற்பகலில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மரம் அறுக்கும் கருவி, ரப்பர் படகு உள்ளிட்ட வெள்ள மீட்புக் கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

Similar News

News November 16, 2025

ராசி பலன்கள் (16.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 16, 2025

பிஹார் தேர்தல்: மாரடைப்பால் உயிரிழந்த வேட்பாளர்

image

பிஹார் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ஜன்சுராஜ் வேட்பாளர் சந்திர சேகர் சிங் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தராரி தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு, தேர்தல் பிரசாரத்தின் போது மாரடைப்பு வந்தது. சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட நிலையில், 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2,271 வாக்குகள் மட்டுமே பெற்று, 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

News November 16, 2025

அடிப்படை புரிதலின்றி பேசும் EPS: TRP ராஜா

image

தமிழகத்திற்கு வர இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவதாக <<18295289>>EPS குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், எவ்வித அடிப்படை புரிதலுமின்றி ஊர் வம்பு பேசும் பெருசுகள் போல EPS குற்றம்சாட்டி வருவதாக அமைச்சர் TRP ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!