News January 10, 2025

பிளவுபடாத இந்தியா நிகழ்வில் பாக். பங்கேற்பு

image

‘பிளவுபடாத இந்தியா’ என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள பாக்., வங்கதேசம், பூடான், ஆஃப்கன், மாலத்தீவு, மியான்மர், இலங்கை, நேபாள் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இது தவிர, மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க பாக். சம்மதித்துள்ளது.

Similar News

News November 14, 2025

பிஹாரா இது! அமைதியாக நடந்த தேர்தல்

image

பிஹாரில் தேர்தல் என்றாலே கலவரமும் சேர்ந்தே நடக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களும் பெரும் அளவில் திரண்டுவந்து வாக்களித்தனர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவங்களும் இல்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நிச்சயம் நல்ல மாற்றம் தானே?

News November 14, 2025

உலகின் முதல் AI குழந்தை!

image

பிரமாண்டமாய் வளர்ந்து வரும் AI, தற்போது கருவை உருவாக்கி அறிவியல் புரட்சி செய்துள்ளது. மெக்ஸிகோவில் 40 வயது பெண் ஒருவர், AI உதவியுடன் கருத்தரித்து, உலகின் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த IVF சிகிச்சையில், AURA என்ற AI ரோபோ சரியான விந்தணுவை, கருமுட்டையில் செலுத்தி வளர்க்கிறது. லட்சக்கணக்கில் செலவாகும் IVF சிகிச்சை இனி மலிவாகவும், வெற்றிகரமாகவும் மாறும் என்ற நம்பிக்கையை AI அளித்துள்ளது.

News November 14, 2025

தலைகீழாக மாற்றம்… அடுத்தடுத்து ட்விஸ்ட்

image

பிஹாரில் 2020-ஐ ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் நிலை தலைகீழ் சரிவை கண்டுள்ளது. ஆரம்பத்தில் கடும்போட்டி நிலவிய நிலையில், 9 மணிக்கு மேல் NDA கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது. தற்போது NDA கூட்டணி 196 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதில் தனித்து BJP -89, JDU – 79 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

error: Content is protected !!