India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. சிம்மம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகள்தான் அவை. இந்த ராசியினர் உறவினர்களிடத்தில் பேசும்போது கவனமாக பேச வேண்டும்.

பெங்களூருவில் காரில் ரூ.2 கோடி பணத்தை எடுத்துச் சென்ற பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஐடி விசாரணையில் அந்தப் பணத்திற்கான கணக்கு இருந்ததால் விதிமீறல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் விதிகளின்படி பணத்திற்கான பெறுநர் படிவம் இல்லாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் உள்ள ‘Impact Player’ விதியை நீக்க RCB அணியின் பந்து வீச்சாளர் சிராஜ் கோரிக்கை வைத்துள்ளார். பேட்ஸ்மேன்கள் ஏற்கெனவே பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்துவரும் நிலையில் இந்த விதி மேலும் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக அமைவதாக சிராஜ் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த விதியின் மீது அதிருப்தி தெரிவித்திருந்தார்.

வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் ‘அதிகாரம்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது குறித்து பேசிய லாரன்ஸ், வெற்றிமாறன் கூறிய திரைக்கதையை கேட்டு பிரமித்துப் போனதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். அவர் எழுதிய பிரம்மாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி எனக் கூறினார். இப்படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தையை காப்பாற்றச் சென்று 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர கன்னடாவில் விடுமுறையை கொண்டாடச் சென்ற நபர்கள் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்ற முயன்றபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஹூப்ளியை சேர்ந்தவர்கள் என்பதும், இறந்த 6 பேரில் 4 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியா தவறான பாதையில் செல்லாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மீதான பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள அவர், முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏமாற்றம் கிடைத்த பிறகு பொய்கள் பலன் தராததால், தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் வேலையில், பாஜக ஈடுபட்டுள்ளாதாக தெரிவித்தார். வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்றவற்றை மனதில் வைத்தே மக்கள் வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் பணியாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 5 இலட்சத்திற்கும் அதிமானவர்களை பணியில் அமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அதன் உற்பத்தி திறனை 40 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.5 இலட்சம் இந்தியர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரு கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்திற்குள் திடீரென இரண்டு கட்சியினரும் நாற்காலிகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். பாஜக இதனை ‘வன ராஜ்ஜியம்’ என்று விமர்சனம் செய்துள்ளது.

KKR அணி வீரர் சுனில் நரைன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். RCB அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய நபர் என்ற சாதனை படைத்துள்ளார். KKR அணிக்காக 172 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து மலிங்கா (170-MI), புவனேஷ்வர் குமார் (150-SRH) மற்றும் பிராவோ (140-CSK) ஆகியோர் உள்ளனர்.

கடலூரில் திமுகவிற்கு வாக்களிக்காத பெண்ணை திமுக நிர்வாகிகள் அடித்தே கொன்றுவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தமிழக காவல்துறை, அது பொய்யான தகவல் என்று விளக்கமளித்துள்ளது. முன் விரோதம் காரணமாக நடந்த கொலையை அரசியல் ரீதியாக திசை திருப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று காவல்துறை கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.