News July 15, 2024
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. அப்போது, பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டு, ஆடி மாத பிறப்பான நாளை அதிகாலை 5 மணிக்கு நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி, பக்தர்கள் விர்சுவல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News July 8, 2025
இந்த பெண்ணுக்கு 16-ம் தேதி தூக்கு தண்டனை

ஏமன் சிறையில் இருக்கும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, இந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிட இருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் தலால் அப்தோ மெஹ்தி என்பவரை கொலை செய்ததாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் உறுதியானதால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நிமிஷாவின் தண்டனையை குறைக்க அவரது தாயார் போராடி வந்தார். எனினும் தூக்கிலிடப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிட சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடுமுன் யோசிக்கவும்.
News July 8, 2025
வேன் விபத்து… பள்ளிக்கு பறந்த திடீர் நோட்டீஸ்

கடலூர் மாவட்டத்தில் வேன் விபத்துக்குள்ளான தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்துக்குள்ளான வேனில் உதவியாளர் இல்லாதது தெரியவந்துள்ளது. ஆனால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் உதவியாளர் இருக்க வேண்டியது கட்டாயம். உதவியாளர் இல்லாமல் வேனை இயக்கியது ஏன் என விளக்கம் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளின் பள்ளி வாகனத்தில் உதவியாளர் இருக்கிறார்களா என பாருங்கள் பெற்றோரே..!