News June 19, 2024
முடிவை மாற்றிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை பதிவு செய்து இயக்க உரிமையாளர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். பிற மாநில பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்ய தேவையான வசதிகளை செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் பல்வேறு கெடுகளை மீறி இன்னும் 547 ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண்ணாக மாற்றாமல் உள்ள நிலையில், இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய வேண்டாம் என அரசு பயணிகளை எச்சரித்திருந்தது.
Similar News
News January 18, 2026
தென்காசி: பீர் பாட்டிலால் ஓட்டுநரின் மண்டை உடைப்பு

கடையம் அருகே வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேக் (30). மினி பஸ் டிரைவரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மது பாரில் மது அருந்த சென்றார். அப்போது கிழ கடையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் பீர் பாட்டிலால் சுவேக் தலையில் அடித்ததில், அவரது மண்டை உடைந்து தென்காசி GH-ல் அனுமதிக்கப்பட்டார். கடையம் போலீஸார் சரவணக்குமாரை கைது செய்தனர்.
News January 18, 2026
கேஸ் சிலிண்டர் சீக்கிரமாக காலியாகாமல் இருக்க…

*பர்னர் சுத்தமா இருக்கணும். அழுக்கு இருந்தால், நெருப்பு அதிகமாக தேவைப்படும் *தட்டையான பாத்திரத்தை பயன்படுத்தும் போது, நெருப்பு சமமாக பரவி சீக்கிரமாக சமையல் ஆகும் *அரிசி, பருப்பு, சுண்டல், மொச்சை போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வேகும் *பாத்திரத்தை கழுவிய உடனே ஈரத்துடன் அடுப்பில் வைக்க வேண்டாம். அதே போல, fridgeல் இருந்து எடுத்தவுடன் காய்கறிகளை அடுப்பில் போட வேண்டாம்
News January 18, 2026
விடுபட்டவர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு ₹3,000

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாத குடும்பங்கள் நாளை(ஜன.19) முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைகளில் ஜன.14-ம் தேதி வரை 2.15 கோடி குடும்பங்கள் மட்டுமே பொங்கல் பரிசை பெற்றுக் கொண்டனர். விடுபட்ட 7 லட்சம் குடும்பங்களுக்கு ₹3,000 ரொக்கம், பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முழுக் கரும்பு வழங்கப்படவுள்ளன. SHARE IT.


