News March 20, 2024
பாஜகவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில் பாஜகவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. கோவை பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களை அனுப்பிய ஸ்ரீ சாய்பாபா பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 10, 2026
டிவி சேனலை தொடங்கும் சீமான்

தமிழகத்திலுள்ள திமுக (கலைஞர்), அதிமுக (நியூஸ் J), விசிக (வெளிச்சம்) என ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியாக செய்தி சேனல்கள் வைத்திருக்கின்றன. இதன்மூலம் தேர்தல் பரப்புரை மற்றும் தங்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும். அதுபோலதான் தற்போது, ‘எங்கள் தேசம்’ என்ற பெயரில் வலை தொலைக்காட்சியை பிப்.14-ம் தேதி சீமான் தொடங்கி வைக்கிறார். இது TV சேனலாக உருவெடுக்கிறது.
News February 10, 2026
EPS கோரிக்கையால் மோடி ராஜதந்திரம்

இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் மூலம் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் EPS தொடர் கோரிக்கை வைத்தார். தற்போது மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால், திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருப்பார்கள்; மக்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும் என்றார்.
News February 10, 2026
பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

மாநிலங்களவையில் பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் பேசியது நாடாளுமன்ற மரபுகளையும், அவையின் உரிமையும் மீறும் செயல் என அவர் கூறியுள்ளார்.


