News August 21, 2024
தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை: இபிஎஸ்

திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில், கன்வேயர் பெல்டில் தலைமுடி சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக, இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். “பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தொழிலாளர் பாதுகாப்பில் திமுக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 13, 2026
ரேஷன் கார்டு தொலைந்தாலும் பொங்கல் பரிசு

ரேஷன் கார்டு தொலைந்து போனவர்களும், புதிய ரேஷன் கார்டு நகலுக்கு விண்ணப்பித்துள்ளவர்களும் பொங்கல் பரிசை பெறலாம் என உணவு வழங்கல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் (அ) கார்டு எண் இருந்தால் போதும். பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் கார்டு ஸ்கேனிங்கிற்கு பதிலாக, கார்டு எண்ணை பதிவு செய்து, கை ரேகை வாயிலாக ஆதார் சரிபார்க்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும்.
News January 13, 2026
யாருக்கெல்லாம் தமிழக அரசின் விருது?

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட சிறந்த ஆளுமைகளுக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான பல்வேறு தலைவர்களின் பெயரிலான விருதுகளை பெறுவோரின் பட்டியலை அறிய, மேலே போட்டோக்களை ஸ்வைப் பண்ணுங்க.
News January 13, 2026
பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன.15 – 18 வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், போகிப் பண்டிகையை கொண்டாட ஏதுவாக நாளையும் (ஜன.14) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் & அரசு அலுவலகங்களுக்கு 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.31-ல் அரசு அலுவலகங்கள் செயல்படும்.


