News November 29, 2024
5 மற்றும் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஃபெஞ்சல் புயல் நெருங்கி வருவதால், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பது பொருள். 7ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
Similar News
News November 8, 2025
டிச.12-ல் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டிச.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், அந்தந்த சாதியின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தினார்.
News November 8, 2025
ALERT: செல்போன் நம்பரை வெளியிட்டார் நடிகை ருக்மினி

‘காந்தாரா சாப்டர் 1’ படத்திற்கு பிறகு நேஷனல் கிரஷ் ஆக மாறியுள்ளார் ருக்மினி வசந்த். இந்த நிலையில், அவரை போல யாரோ ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து, முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, தனது சோசியல் மீடியாவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக 9445893273 என்ற செல்போன் எண்ணில் இருந்து தன் பெயரைக் கூறி யாரேனும் பேசினால் நம்ப வேண்டாம். அவர்களிடம் உஷாராக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
மாதம் மாதம் ₹11,000 கிடைக்கும் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் மாதம் ₹11,000 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில், ₹15 லட்சத்தை முதலீடு செய்தால், 8.2% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ₹1,23,000 வட்டியாக கிடைக்கும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ₹11,750 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம். அருகில் இருக்கு போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.


