News October 11, 2025

கோல்ட்ரிப் இருமல் சிரப்பால் TN அரசுக்கு புதிய நெருக்கடி!

image

21 குழந்தைகளின் உயிரை குடித்த கோல்ட்ரிப் இருமல் சிரப் விவகாரம் TN அரசுக்கு புதிய நெருக்கடியை தந்துள்ளது. ம.பி.,யில் குழந்தைகள் இறந்தாலும், மருந்தை உற்பத்தி செய்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் TN-ல் இருப்பதால் அவர்கள்தான் பொறுப்பு என ம.பி., CM மோகன் யாதவ் கூறியிருந்தார். இந்நிலையில், TN அரசின் நிர்வாக திறன் குறைபாடே குழந்தைகள் இறக்க காரணம் என EPS-ம், சுகாதாரத்துறையின் தோல்வி என சீமானும் சாடியுள்ளனர்.

Similar News

News December 7, 2025

இந்தியாவுக்கு எதிராக ரெக்கார்டு படைத்த டி காக்

image

இந்தியாவுக்கு எதிரான 3-வது ODI-ல் சதம் அடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார். அவர் IND-வுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். கில்கிறிஸ்ட் Vs SL மற்றும் சங்கக்காரா Vs IND, தலா 6 சதங்கள் விளாசியிருந்தனர். மேலும், ODI-ல் அதிக சதம் அடித்த WK பட்டியலில் சங்கக்காராவுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் தலா 23 சதமடித்துள்ளனர்.

News December 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 542
▶குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
▶பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

News December 7, 2025

ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

image

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!