News April 8, 2024
நிதிஷை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

4,000க்கும் அதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்ததை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பிஹாரில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய நிதிஷ், பாஜக கூட்டணி 4,000க்கும் அதிக தொகுதிகளில் வெல்லும் என கூறியிருந்தார். இதை ஆர்ஜேடி கட்சியினரும், நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் கிண்டலடித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
விஜய்யை விசாரிக்க CBI திட்டம்

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் CBI அதிகாரிகள் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே தவெக முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல்குமார், மதியழகனிடம் கரூரில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, கரூருக்கு பதிலாக சென்னையில் வைத்தே விஜய்யிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாம்.
News December 13, 2025
2025-ல் அதிக குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த டாப் 5 நாடுகள்!

இந்த நாடுகளில் எங்கு பார்த்தாலும் கொள்ளை கொலை சம்பவங்கள்தான். அரசும், காவல்துறையும் தடுமாறும் சூழலில், கயவர்கள் கைவரிசை காட்டி, மக்களை அச்சுறுத்துகின்றனர். குற்ற சம்பவங்கள், நிதி & சைபர் மோசடிகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2025-ல் உலகின் டாப் 5 மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலை ‘நம்பியோ’ என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. எந்தெந்த நாடுகள் உள்ளன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணுங்க.
News December 13, 2025
காங்கிரஸில் இருந்து விலகுகிறாரா சசி தரூர்?

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் MP-க்கள் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அண்மைக் காலமாக சோனியா, கார்கே ஆகியோரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் அவர், PM மோடி, மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் அதிகம் தலையை காட்டி வருகிறார். இதனால், அவர் கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைவதற்கு அச்சாரமிடுவதாக பேச்சு எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?


