News June 19, 2024

நீட் தேர்வு என்பது வணிக வியாபாரம்:செல்வப்பெருந்தகை

image

நீட் தேர்வு என்பது வணிக வியாபாரமாகி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். பணம் செலவு செய்து, பயிற்சி மையத்தில் சேர முடியாத பல மாணவர்களின் கல்விபெறும் வாய்ப்பை நீட் தேர்வு பறிக்கிறது எனக் கூறிய அவர், சமூக நீதியை காக்க நீட் ஒழியும் வரை போராடுவோம் என்றார். நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார்.

Similar News

News January 18, 2026

தமிழகத்தில் தரமான பேராசிரியர்கள் இல்லை: ரவி

image

பள்ளிகல்வி, உயர்கல்வி, பிஎச்டி ஆகிய நிலைகளில் தரமான கல்வியை உறுதிசெய்ய வேண்டும் என கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பல பேராசிரியர்கள் தகுதிவாய்ந்தவர்களாக இல்லை என்றும், அதனால் தரமான பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் உயர்கல்வி சேரும் மாணவர்கள் விகிதத்தில் TN தான் முதலிடத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 18, 2026

BIG NEWS: அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்

image

தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்து தனது ஆதரவை கூறியுள்ளார். இந்த ஆதரவு, தென் மாவட்டங்களில் இது அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

News January 18, 2026

வாக்குகளுக்காக நிலத்தை தாரைவார்த்த காங்கிரஸ்: PM

image

காங்., ஆட்சியில் பல தசாப்தங்களாக ஊடுருவல் அதிகரித்து வந்ததாக PM மோடி விமர்சித்தார். அசாமில் ₹6,957 கோடியிலான காசிரங்கா உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர், காங்., வாக்கு வங்கி அரசியலுக்காக அசாம் மாநிலத்தின் நிலத்தை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றஞ்சாட்டினார். ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, அசாமின் அடையாளத்தை பாஜக பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!