News June 17, 2024

எம்.ஜி.ஆர். முதல்வரானதற்கு காரணமாக இருந்த கவிஞர்

image

எம்.ஜி.ஆர். முதல்வரானதற்கு கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள் முக்கிய காரணம் என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். தமுஎகச நிகழ்ச்சியில் பேசிய அவர், “உழைக்கும் வர்க்கத்தினர் படும் பாடுகளை தன்னுடைய பாடல் வரிகள் மூலம் எழுதி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரை தனக்கு பக்கபலமாக எம்.ஜி.ஆர். வைத்துக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 22, 2026

ஜன நாயகன் படத்தில் அந்த மாதிரியான விஷயம் இல்லை

image

‘ஜன நாயகன்’ படத்தில் தணிக்கை வாரியம் நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என ஹெச்.வினோத்தின் நண்பரும், இயக்குநருமான இரா.சரவணன் தெரிவித்துள்ளார். திரைக்கதை விவாதத்தின்போது தானும் உடனிருந்ததாக கூறிய அவர், ஜன நாயகன் திரைப்படம் ‘பகவந்த் கேசரி’ படத்தை தழுவினாலும், தணிக்கையில் சிக்கல் ஏற்படாத வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதில் வினோத் தெளிவாக இருந்தார் எனவும் கூறினார்.

News January 22, 2026

குழப்பத்தை உண்டாக்க அதிமுக முயற்சி: எ.வ.வேலு

image

ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் தங்களை பேச அனுமதிக்கவில்லை என கூறி <<18923157>>அதிமுகவினர் <<>> சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், சட்டப்பேரவையின் நடைமுறைகளை மாற்றி, அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியிலும் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

News January 22, 2026

அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

image

கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இவ்வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் தற்போது ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும், நிகிதாவின் நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!