News October 18, 2025

மெஹுல் சோக்‌ஷியை நாடு கடத்த உத்தரவு

image

பல்வேறு வங்கிகளில் ₹13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு, வைர வியாபாரி மெஹுல் சோக்‌ஷி பெல்ஜியம் தப்பி சென்றார். இந்நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அவரை பெல்ஜியம் அரசு கைது செய்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் உடனடியாக நாடுகடத்த சாத்தியமில்லை என தெரிகிறது.

Similar News

News November 19, 2025

கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விட வாய்ப்புள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பை ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News November 19, 2025

விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டவர்: அப்பாவு

image

SIR-க்கு எதிராக தவெக நடத்திய போராட்டம் வெறும் கண்துடைப்பு என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். உண்மையில் SIR எதிர்ப்பதாக இருந்தால் விஜய் SC-ல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்று பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இணைவார்கள் எனவும் கூறியுள்ளார். SIR-க்கு எதிராக விஜய் போட்ட வீடியோவில் மத்திய அரசை விமர்சிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.

News November 19, 2025

டிஜிட்டல் தங்கத்தின் விலை 61% குறைவு

image

தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் குறைந்த விலையில் முதலீடு செய்யலாம் என சொல்லி டிஜிட்டல் தங்க விற்பனையை அதிகரித்தன. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை ₹1,410 கோடியாக இருந்தது. ஆனால் இந்த முதலீடு ஆபத்தானது என பொருளாதார நிபுணர்கள் மக்களை எச்சரித்தனர். இதனால் அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் தங்க விற்பனை ₹550 கோடியாக சரிந்துள்ளது.

error: Content is protected !!