News August 4, 2024

போலீஸ் எனக்கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் கைது

image

ஒடிசாவில் போலீஸ் எனக்கூறி, 5 பெண்களை திருமணம் செய்த சத்யஜித் சமால் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரையடுத்து, ஒரு பெண் அதிகாரியை பயன்படுத்தி, சமாலை பிடித்துள்ளனர். 6வது திருமணத்திற்காக பெண் அதிகாரியை பார்க்க வந்தபோது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். சமாலிடமிருந்து கார், பைக், பல லட்சம் பணம், துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News January 21, 2026

சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

image

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News January 21, 2026

நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் சாதனை!

image

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணியளவில் FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும். இதன்மூலம் மொரார்ஜி தேசாய் (6), மன்மோகன் சிங் (5), அருண்ஜெட்லி (5), ப.சிதம்பரம் (5), மற்றும் யஷ்வந்த் சின்ஹா (5) உள்ளிட்ட Ex. நிதி அமைச்சர்களை விட அதிகமுறை மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெறுவார்.

News January 21, 2026

TN-ல் கூலிப் படைகளின் அட்டூழியம்: TTV தினகரன்

image

குற்ற சம்பவங்கள், கூலிப் படைகளின் அட்டூழியம் என TN-ல் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று TTV தினகரன் கூறியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் போராடிக்கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்நேரத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்பதுபோல அரசு செயல்படுவதாக கூறி பெருமை பேசுவது கேலிக்கூத்தானது என்றார். மேலும், மக்கள் மத்தியில் கவர்னர் உரை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!