News January 13, 2025
சபரிமலையில் நாளை மகரஜோதி

சபரிமலையில் நாளை நடைபெறும் மகரஜோதி தரிசனத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெரிசலைத் தவிர்க்க, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இன்றும், நாளையும் ஆன்லைனில் புக் செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை காலை 7 மணியிலிருந்து நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 12 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
Similar News
News November 17, 2025
ரஜினியிடம் பேய் கதை கூறிய சுந்தர்.சி ?

ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி கூறிய பேய் கதையின் முழு script ரஜினிக்கு பிடிக்காமல் போனதாலேயே அவர் விலகியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பேய் கதையை சுந்தர்.சி, 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே சந்தானம் மற்றும் விஜய் சேதுபதியிடம் சொல்லியதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி எந்த மாதிரியான கதைக்களத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?
News November 17, 2025
உங்களுக்கு IT நோட்டீஸ் வராம இருக்கணுமா?

உங்களை தேடி IT நோட்டீஸ் வருவதை தவிர்க்க, இந்த Limits-ஐ மீறாதீர்: *ஆவணம் இன்றி பணப்பரிசு Limit: ₹50,000 *ஒரே நாளில் ஒருவரிடம் இருந்து பணம்பெறும் Limit: ₹2 லட்சம் *ஒரே நாளில் சேமிப்பு கணக்கில் கேஷ் டெபாசிட் Limit: ₹10 லட்சம் *ஒரே நாளில் கரன்ட் அக்கவுன்ட்டில் டெபாசிட் Limit: ₹50 லட்சம் *கிரெடிட் கார்டுக்கு ஒரே நாளில் ரொக்கமாக செலுத்தும் Limit: ₹1 லட்சம் *சொத்து விற்பனை Limit: ₹30 லட்சம்.
News November 17, 2025
RAIN ALERT: 15 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

<<18309708>>ஆரஞ்சு அலர்ட்டால்<<>> தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, செங்கை, காஞ்சி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது கவனமாய் இருங்கள் நண்பர்களே!


