News April 8, 2024
13 வயது சிறுமிக்கு ஜாப் ஆஃபர் தந்த மஹிந்திரா

உ.பி-யைச் சேர்ந்த சிறுமி நிகிதா (13) அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளை விரட்டிய சம்பவம் பேசும்பொருளாகியுள்ளது. குரங்குகளின் தாக்குதலில் இருந்து தன் தங்கையை பாதுகாக்க தைரியமாக அலெக்சாவில் நாய் குரைக்கும் ஓசையை எழுப்ப வைத்து, அவற்றை விரட்டியடித்துள்ளார். சிறுமியின் அறிவுக்கூர்மையைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா, “விரும்பினால் எதிர்காலத்தில் அவர் தனது நிறுவனத்தில் பணியில் சேரலாம்” என ஆஃபர் தந்துள்ளார்.
Similar News
News December 14, 2025
தங்கமே கொடுத்தாலும் வாக்கு கிடைக்காது: செல்லூர் ராஜூ

திமுக நான்கே முக்கால் வருடங்களில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது என Ex அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே திமுக தொடங்கி வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் CM, DCM, அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அதிமுகதான் என்றும், திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
SIR படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசிநாள்

TN முழுவதும் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், வாக்குச்சாவடிகளில் BLO-க்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளனர். அதில், தங்களது படிவங்களை மறக்காமல் ஒப்படைத்துவிடுங்கள். இல்லை எனில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட வாய்ப்புள்ளது. வரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
News December 14, 2025
ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு நிதியை விடுக்க வேண்டும்: EPS

மாணவர்களுக்கான உணவு படியையும், தனக்கான பணி மாறுதலும் கிடைக்காததால் விரக்தியில் மயிலாடுதுறை ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் விடுதிக் காப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். மேலும் விடுதிகளுக்கு நிதியை விடுவிக்காததை கண்டிப்பதாகவும், இனியாவது நிதியை சரியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


