News September 30, 2025
தவெக நிர்வாகிகளுக்கு ஆயுள் தண்டனையா?

கரூர் துயர சம்பவம் தொடர்பாக <<17869322>>BNS<<>> சட்டத்தின் கீழ் N.ஆனந்த், CTR நிர்மல் குமார், மா.செ மதியழகன் மற்றும் சிலர் என குறிப்பிட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ‘மற்றும் சிலர்’ (Others) என குறிப்பிடப்பட்டுள்ளதால், விசாரணையின் முடிவில் விஜய் பெயர் சேர்க்கப்பட்டால் அவருக்கும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
Similar News
News December 12, 2025
ராசி பலன்கள் (12.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 12, 2025
ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கெளரவம்

சினிமாவில் பொன்விழா கொண்டாடியுள்ள ரஜினிகாந்துக்கு, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனை, அவரது மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். மேலும், நாளை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதே விழாவில் ‘பாட்ஷா’ சிறப்பு படமாக திரையிடப்படவுள்ளது. அத்துடன், ‘படையப்பா’ படம் நாளை ரீரிலீஸ் ஆகிறது. இதற்கான புரோமோஷனில் ரஜினியே களமிறங்கிய நிலையில், ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ளது.
News December 12, 2025
புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை பாயுமா?

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பின்போது, புஸ்ஸி ஆனந்த் டோக்கன் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க கோரினார். இது மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், போலீஸ் விதிகளை மீறி புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டிருந்தால், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தவெக வைத்த கோரிக்கைபடியே நிபந்தனைகளை விதித்தோம் என்றும் கூறினார்.


