News February 27, 2025
ஹிந்திக்கு இடம்கொடுத்த மொழிகள் தொலைந்தன: CM

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது என CM ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். X பக்கத்தில் தமிழ் வாழ்க, SaveIndianLanguages என்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டிருக்கும் அவர், ஹிந்திக்கு இடம் கொடுத்த சில மொழிகள் இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன எனக் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்ற தலைப்பில் தமிழைக் காக்க திமுக எடுத்த முன்னெடுப்புகளையும் டேக் செய்துள்ளார்.
Similar News
News February 27, 2025
கொலை செய்துவிட்டு ரீல்ஸ்: ஷாக்கான போலீஸ்

சென்னையில் கொலை செய்துவிட்டு, அதை இன்ஸ்டாகிராமில் ரீல் பதிவிட்டு கொண்டாடியவர்களால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணாநகரில் சின்ன ராபர்ட் என்பவரை கொன்றுவிட்டு, அயனாவரத்தில் ரேவதி என்ற பெண்ணையும் கொல்ல முயன்றிருக்கிறது. பின்னர் அந்த கும்பல், கொலை செய்ததை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டாடி இருக்கிறது. இதைப் பார்த்த போலீஸ், அவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்திருக்கிறது.
News February 27, 2025
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ஆய்வு செய்து, 14 திருத்தங்களை மேற்கொள்ள பார்லி. கூட்டுக் குழு பரிந்துரை செய்தது. இந்த 14 திருத்தங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் மார்ச் 10ஆம் தேதி துவங்க உள்ள பட்ஜெட் தொடரின் 2ஆவது அமர்வில், இந்த திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 27, 2025
நாளை ஆஜராக முடியாது: போலீசுக்கு சீமான் சவால்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், ஆஜராக போலீஸ் சம்மன் ஒட்டிய நிலையில், நாளை வர முடியாது; என்ன செய்ய முடியும் என்று போலீசாருக்கு சீமான் சவால் விடுத்துள்ளார். நான் ஆஜராவேன் என உறுதியளித்த பின்னரும் காவல் துறைக்கு என்ன அவசரம் வந்தது. இந்த வழக்கில் என்னை மீண்டும் மீண்டும் விசாரித்து அசிங்கப்படுத்தவே முயற்சி நடக்கிறது. காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என தெரிவித்தார்.