News March 22, 2024
கோலிக்கு இன்னும் 15 ரன்கள் தேவை

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை 985 ரன்கள் எடுத்துள்ள அவர், இன்னும் 15 ரன்கள் அடித்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக 1,000 ரன்கள் எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். முதல் இடத்தில் ஷிகர் தவான் (1,057) உள்ளார். ஆர்சிபிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களின் பட்டியலில் தோனி (740) முதல் இடத்தில் உள்ளார்.
Similar News
News November 12, 2025
தோல்வியில் இருந்து தப்பிய பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவும், பொது வீரராக பங்கேற்ற டேனியல் துபோவும் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 14-வது நகர்வின் போது ராணி முன்னால் இருந்த சிப்பாயை பிரக்ஞானந்தா கவனக்குறைவாக நகர்த்தினார். இதன்மூலம் டேனியல் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவசரத்தில் அதை கவனிக்க தவறிவிட்டார். பின்னர் 41-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
News November 12, 2025
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் அசத்தல்

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முடிவுகளை <
News November 12, 2025
தனித்தனியாக ஆலோசனை செய்யும் ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார். அப்போது, 2026 தேர்தலில் கட்டாயம் திமுக வெற்றிபெற வேண்டும; தோல்வியடைந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், யாரை நிறுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற கருத்தையும் கேட்டுள்ளார்.


