News April 23, 2025

காஷ்மீர் தாக்குதல்: மோடியிடம் போனில் பேசிய ட்ரம்ப்

image

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொலைபேசியில் PM மோடியை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன்நிறுத்த முழு ஆதரவு அளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Similar News

News November 12, 2025

30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலி

image

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலியானதாக ‘The Climate Risk Index’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், டொமினிகா, மியான்மர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. மேலும், 1995 முதல் 430 பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News November 12, 2025

‘தற்குறி’ என சொல்லாதீங்க: எழிலன்

image

ஒரு சாராரை ‘தற்குறி’ என திமுகவினர் விமர்சிக்கின்றனர். இந்நிலையில், ‘தற்குறிகள்’ என விமர்சனம் செய்வது தவறான அணுகுமுறை என்று திமுக MLA எழிலன் தெரிவித்துள்ளார். நாம் அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை, உரையாடவில்லை; அது நம்முடைய தவறு என்று கூறினார். மேலும், அவர்கள் சங்கிகள் கிடையாது; அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசினால்தான் போலியான தலைவர்களைப் பற்றி உணர்வார்கள் எனவும் ஆலோசனை வழங்கினார்.

News November 12, 2025

CSK அணி 6 வீரர்களை கழட்டி விட திட்டம்

image

நவம்பர் 15-ம் தேதிக்குள் IPL அணிகள் தக்கவைப்படும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும். இதனால் அந்த பட்டியலை தயார் செய்யும் பணியில் அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன. இதனிடையே CSK அணி டிரேட் மூலம் சஞ்சுவை வாங்க உள்ள நிலையில், 6 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கான்வே, திரிபாதி, ஹூடா, ராமகிருஷ்ண கோஷ், குர்ஜப்னீத் உள்ளிட்டோரை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!