News October 6, 2025

கரூர் துயரம்: கைது செய்ய விரைகிறது போலீஸ்

image

கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த், நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வரவிருப்பதால், இருவரையும் இன்று இரவு அல்லது நாளைக்குள் கைது செய்ய தனிப்படை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 15, 2025

பற்கள் மஞ்சளா இருக்கா? நீங்களே சரி செய்யலாம்!

image

பற்கள் மஞ்சளாக இருப்பதால் வாய் திறந்து பேசக்கூட சங்கடப்படுகிறீர்களா? கவலைய விடுங்க. இதனை வீட்டிலேயே சரி செய்யலாம். ஒரு டீஸ்பூன் உப்புடன் சில துளிகள் எண்ணெய் கலந்து, பிரஷ் பயன்படுத்தி பற்களில் ஒரு வாரம் தேய்க்கவும். எலுமிச்சை (அ) ஆரஞ்சு பழத்தோலையும் பற்களில் தேய்க்கலாம். இவற்றை தொடந்து செய்துவர மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சென்று ஆகும் என்கின்றனர். பலருக்கு பயனளிக்க SHARE THIS.

News November 15, 2025

கனமழை: 10 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

image

<<18295449>>கனமழையை <<>>எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, 10 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற தகவலை அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 15, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. செப்டம்பரில் 1.54% ஆக இருந்த நாட்டின் சில்லறை பண வீக்கம், அக்டோபரில் 0.25% ஆக குறைந்திருக்கிறது. இதனால், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால், கடன்களுக்கான MCLR புள்ளிகளை வங்கிகள் குறைக்கும். இதனால், உங்களின் EMI குறையும். SHARE IT

error: Content is protected !!