News September 29, 2025

கரூர் துயரம்: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

image

கரூர் துயர சம்பவத்தை விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை கரூர் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக விசாரணை அதிகாரியாக கரூர் நகர காவல் நிலைய டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 8, 2025

வந்தே மாதரத்தை பாடாதவர்கள் கேள்வி கேட்பதா? கார்கே

image

வந்தே மாதரத்தை பாடாத RSS-காரர்கள், இன்று தேசியத்தின் காவலர்களாக காட்டிக் கொள்வது விந்தையாக இருப்பதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் முக்கிய வரிகளை நீக்கி, நாட்டு பிரிவினைக்கு காங்., வித்திட்டதாக மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதிலளித்துள்ள கார்கே, RSS ஷாகா, அலுவலகங்களில் தேசிய கீதமான ஜன கண மன, வந்தே மாதரம் இரண்டையும் பாடியதே இல்லை என விமர்சித்தார்.

News November 8, 2025

ஏன் இவ்வளவு தாமதம்? அரசுக்கு EPS கேள்வி

image

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், MLA தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றதாகவும் கூறியுள்ளார். எனவே உடனடியாக அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News November 8, 2025

ராசி பலன்கள் (08.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!