News September 3, 2025

JUST IN: ஓசூர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

ஓசூர் நகரின் வளர்ச்சியால் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை புதிய ரிங்ரோடு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட 8 KM இன்னர் ரோடு முழு தீர்வாக இல்லாததால் ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரை 320 கோடியில் புதிய ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. இதோடு பத்தலப்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே தொடங்கி ஜொனபெண்டா வரை 6KM நீளத்தில் 138கோடி செலவில் ரிங்ரோடு திட்டமும் தயார்

Similar News

News November 13, 2025

கிருஷ்ணகிரி: ரூ.85,920 வரை சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு.

News November 13, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம், சார்பில் ஆதிதிராவிடர் & பழங்குடி இன மாணவர்கள், ஆஸ்திரேலியா அமெரிக்க கன்னட உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் வகையில், (IELTS) ஆங்கில முறை தேர்வுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.

News November 13, 2025

கிருஷ்ணகிரி: 81.99 சதவீத வாக்காளா்களுக்கு SIR படிவம் விநியோகம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (நவ13) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.தினேஷ்குமாா் மாவட்டத்தில், மொத்தமுள்ள 16,80,626 வாக்காளா்களில் 13,77,894 பேருக்கு (81.99%) கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

error: Content is protected !!