News January 15, 2025

ரஞ்சி கோப்பையில் களமிறங்கும் ஜெய்ஸ்வால்

image

இந்தியா கிரிக்கெட் அணி ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரஞ்சி கோப்பையில் களமிறங்கவுள்ளதாக மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு (MCA) தெரிவித்துள்ளது. ஜன.23ஆம் தேதி ஜம்மு காஷ்மீரை எதிர்கொள்ளும் போட்டியில், மும்பை அணிக்காக ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார். ஏற்கெனவே ரோஹித் சர்மா மும்பை அணியுடன் பயிற்சி மேற்கொண்டார். அவரும் இணைவதாக இருந்தால், நட்சத்திர வீரர்கள் களமிறங்கும் ரஞ்சி கோப்பையாக இது மாறும்.

Similar News

News November 8, 2025

ஒரே கட்சியாக மாறுகிறது.. அரசியல் திருப்பம்

image

வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய திருப்பமாக பிராந்திய அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைய உள்ளன. அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய 7 மாநிலங்களின் உரிமைக்காக முக்கிய தலைவர்களான கான்ராட் சங்கா, பிரத்யோத் மாணிக்யா, டேனியல் லாங்தசா, கிகோன் உள்ளிட்டோர் டெல்லியில் இதற்காக ஆலோசனை நடத்தினர். தென்னிந்தியாவிலும் இதுபோன்ற பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

News November 8, 2025

இனி பட்டன்போனில் பணம் அனுப்பலாம்!

image

UPI-ல் பணம் அனுப்ப ஸ்மார்ட்போன் தான் வேண்டும் என்பதில்லை. பட்டன்போனில் கூட UPI மூலம் பணம் அனுப்பலாம். இதற்காக 2022-ல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய சேவை தான் ‘UPI 123 Pay’. இதில், மிஸ்டு கால் கொடுத்தால் வரும் அழைப்பில் பரிவர்த்தனை மதிப்பு, UPI pin-ஐ வழங்கினால் போதும். இந்த சேவையை சில வங்கிகள் செயல்படுத்தி வரும் நிலையில், IOB-யும் விரைவில் இந்த சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

News November 8, 2025

Operation Pimple: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

image

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் சமீபமாக அதிகரித்து வந்தாலும், இந்திய ராணுவம் அதை தொடர்ந்து தடுத்து வருகிறது. 3 நாள்களுக்கு முன்பு கூட கிஷ்த்வார் பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்நிலையில், குப்வாரா பகுதியில் மீண்டும் ஊடுருவல் முயற்சி அரங்கேறிய நிலையில், Operation Pimple என்ற பெயரில் இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!