News August 6, 2024

நெல்லையில் ஐடிஐ மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டில் மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுகின்றனர். இதற்கான சேர்க்கை தேதி வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 890370 298 மற்றும் 9486251843, 9499055790 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 24, 2026

நெல்லை: இளம்பெண் தற்கொலை!

image

களக்காடு அருகே கடம்போடுவாழ்வு பகுதியை சேர்ந்த செல்வின் துரை – கஸ்தூரி (22) தம்பதியினர். கடந்த 19ம் தேதி கஸ்தூரிக்கும் அவரது மாமியாருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கஸ்தூரி விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

News January 24, 2026

நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

நெல்லை மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 24, 2026

நெல்லை: கார் மோதி பரிதாப பலி!

image

நாங்குநேரி கோர்ட்டு பகுதியை சேர்ந்த சன்முகசுந்தரம் (38) நாங்குநேரி சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றினார். இவர் டூவீலரில் நங்குநேரி நம்பி நகர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!