News October 19, 2025
கடவுளை வணங்கும் போது இப்படி நடந்து இருக்கா?

கடவுளிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம் ➥வேண்டும் பொழுது கண்களில் கண்ணீர் வந்தால் வேண்டுதல் பலிக்கும் ➥குழந்தை அழும் சத்தம் கேட்டால், கடவுள் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம் ➥வேண்டும் பொழுது பல்லி சத்தமிட்டால் வேண்டுதல் பலிக்கும் ➥கடவுளிடம் வேண்டும் பொழுது மணி அடிக்கும் சத்தம் கேட்டாலும், கடவுள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் என நம்பப்படுகிறது.
Similar News
News December 9, 2025
சற்றுமுன்: விஜய் கூட்டத்தில் அதிரடி கைது

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு <<18510199>>துப்பாக்கியுடன் <<>>வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டத்திற்கு வந்த சிவகங்கையை சேர்ந்த ஒருவரின் இடுப்பில் துப்பாக்கி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வந்தநிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
தமிழகத்தில் தவெகவுக்கு சிக்கல்: புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தில் எல்லா வகையிலும் தவெக பரப்புரைக்கு சிக்கல் ஏற்படுத்துகின்றனர் என புஸ்ஸி ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய அவர், மற்ற கட்சிகள் புதுச்சேரியில் இவ்வளவு கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சிலவற்றை கொடுத்து உழைக்க வேண்டும் என கூறினார். தற்போது தளபதியின் (விஜய்) குடும்பமாகவே தொண்டர்கள் திரளாக வந்துள்ளதாகவும் கூறி நெகிழ்ந்தார்.
News December 9, 2025
யாரிடம் பிரிவினை உள்ளது? MP ஆ.ராசா

லோக்சபாவில் ‘வந்தே மாதரம்’ விவாதத்தின் போது, பிரிவினை குறித்து கூறும் PM, அது எங்கே உள்ளது, யாரிடம் உள்ளது? என்பதை விளக்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்தார். வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு, இப்பாடல் அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது என்றும் அவர் கூறினார்.


