News February 27, 2025
சீமான் கைதாக வாய்ப்பு?

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் நோட்டீஸில், நடிகை அளித்த புகாரில், ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், சீமான் ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவரது வீட்டிற்கு கூடுதல் போலீசார் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளனர். நீலாங்கரை பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News February 27, 2025
ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா… எச்சரிக்கை

சென்னை கோட்டூர்புரத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்யவந்த நபர், வீட்டில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து சிக்கினார். பெங்களூருவில், உணவு டெலிவரி செய்ய சென்ற நபர், கஸ்டமரிடம் (ஆண்) உறவில் ஈடுபடலாமா எனக் கேட்டுள்ளார். இச்சம்பவங்கள் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. ஒருசிலர் தான் தவறு செய்கிறார்கள் என்றாலும், வீட்டில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் ஆலோசனை என்ன?
News February 27, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும் வகையில், நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கப்படும். இதற்காக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நகர்ப்புற உள்ளாட்சி, ஊராட்சிகள் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
News February 27, 2025
மார்ச் முதல் அதிரடி மாற்றம் .. லேட்டா வந்தால் ஆப் சென்ட்

அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. அமைச்சர் மா.சு திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, பல இடங்களில் டாக்டர்கள், ஊழியர்கள் இல்லாதது தெரியவந்தது. இந்நிலையில், டாக்டர் – டிரைவர் வரை அனைத்து ஊழியர்களும் மார்ச் முதல் பயோமெட்ரிக் வருகையை பதிவு செய்ய வேண்டும். விடுப்பு, ஆப் சென்ட் போன்ற பணிக்கு வராதவர்களின் விவரங்களை தினமும் காலை 8க்குள் அப்டேட் செய்ய வேண்டுமாம்.