News August 7, 2024

முடி உதிரும் பிரச்னையா… அப்போ இதை குடிங்க!

image

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முடி உதிர்வை தடுக்கவும் கேசவர்தினி ஜூஸை பருகலாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நெல்லி, பீட்ரூட், கறிவேப்பிலை, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை நறுக்கி எடுத்து, நீர் ஊற்றி அரைத்து சிட்டிகை சீரகம் தூள் சேர்த்தால் கேசவர்தினி ஜூஸ் ரெடி. இதனை காலையில் வெறும் வயிற்றில் 45 நாள்கள் தொடர்ந்து பருகி வந்தால் ரத்தம் சுத்தமாகி, முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

Similar News

News November 19, 2025

இந்தியாவின் பயிற்சியில் புதிய சுழற்பந்து வீச்சாளர்

image

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் கௌசிக்கை வைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கௌசிக் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கையிலும், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கையிலும் போடும் திறமை கொண்டவர்.

News November 19, 2025

பக்தர்களுக்கு மலையேற்றம் உண்டா? எ.வ.வேலு

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலையில் ஏற அனுமதி உண்டா என பக்தர்களுக்கு குழப்பம் உள்ளது. இந்நிலையில், தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவதா இல்லையா என முடிவெடுக்கப்படும் என அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 524
▶குறள்:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
▶பொருள்: தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.

error: Content is protected !!