News August 18, 2025
ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

GST வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வை கண்டுள்ளன. காலையில் சுமார் 1,000 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய Sensex 676 புள்ளிகள் உயர்ந்து 81,273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல், Nifty 245 புள்ளிகள் உயர்ந்து 24,876 புள்ளிகளாக நீடிக்கிறது. Maruti Suzuki, Bajaj Auto உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் கடும் உயர்வை கண்டுள்ளன.
Similar News
News December 14, 2025
SPF என்றால் என்னென்னு தெரியுமா?

சன்ஸ்கிரீன், பியூட்டி க்ரீம்களை வாங்கும்போது SPF அளவை பார்த்து வாங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுவர். ஏனெனில், SPF (Sun Protection Factor) என்றால் சூரியனில் இருந்து வரும் UVB கதிர்களில் இருந்து சருமத்தை ஒரு கிரீம் எவ்வளவு சிறப்பாக பாதுகாக்கிறது என்பதை குறிக்கும் அளவீடு. இதில், SPF 15 சுமார் 93% UVB கதிர்களை தடுக்கிறது. SPF 30-97%, SPF 50-98%, SPF 70 சுமார் 99% UVB கதிர்களை தடுக்கும்.
News December 14, 2025
அன்புமணி பணமோசடி செய்கிறார்: ராமதாஸ்

PMK பெயரையோ, கொடியையோ அன்புமணி பயன்படுத்த உரிமை இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், விருப்ப மனு என்ற பெயரில் அவர் பணமோசடியில் ஈடுபடுவதாக ECI & DGP-யிடம் ராமதாஸ் தரப்பு புகார் மனு அளித்துள்ளது. முன்னதாக 2026 தேர்தலில் PMK சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அன்புமணி அறிவித்திருந்தார். பொது தொகுதிக்கு ₹10,000, தனித் தொகுதிக்கு ₹5,000 செலுத்தி மனுவை பெறலாம்.
News December 14, 2025
பிரபல நடிகை மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

<<18559412>>நடிகை ராஜேஸ்வரியின் மரணம்<<>> குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அவரது தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கணவன் சதீஷ் கொடுமைப்படுத்தியதால் ராஜேஸ்வரி சோக முடிவை எடுத்தாரா (அ) வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிச.16-ல் ராஜேஸ்வரி மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.


