News August 7, 2025
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை கைவிட்ட இந்திய நிறுவனங்கள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசின் எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் முதலில் 25% வரிவிதிப்பு அறிவித்தபோதே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக பிரபல புளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து அந்த நிறுவனங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
Similar News
News November 12, 2025
டெல்லி போலீசுக்கு மீண்டும் அலர்ட்

டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், சோதனைச் சாவடிகளுக்கும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்த மற்றொரு கார் சிவப்பு நிற Ford Eco Sport என்று அடையாளம் காணப்பட்டு, அதை விரைந்து கண்டுபிடிக்க டெல்லி போலீஸ் மற்றும் அண்டை மாநில போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த காரை கண்டுபிடிக்க<<18265447>> 5 போலீஸ் குழு<<>> அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
கார் வெடிப்பு பின்னணியில் துருக்கி பயங்கரவாதிகளா?

டெல்லி கார் வெடிப்புக்கு துருக்கியில் வைத்து திட்டமிட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதித்திட்டத்தை அரங்கேற்றிய டாக்டர் உமர் மற்றும் கூட்டாளி முசாமில், துருக்கியில் ஜெய்ஸ் இ முகமது ஏஜென்டை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஸ்போர்ட்டை கைப்பற்றியதன் மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. துருக்கி, சில வருடங்களாக பாக்., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
மோடி அரசின் கருவி தேர்தல் ஆணையம்: அப்பாவு

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் SIR பணி நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலைமையை தவறவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், PM மோடியின் ஆணையை ஏற்று நடக்கும் அமைப்பாக அது மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு முன்பு ECI எந்த ஒரு சார்பும் இல்லாத அமைப்பாக இருந்ததாகவும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.


