News January 13, 2025

ஆசிய நாடுகளுக்கு ஏவுகணை விற்கும் இந்தியா

image

இந்தியா- ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரம்மோஸ் ஏவுகணையை இந்தோனேஷியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நீண்ட நாள்களாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது ₹3,870 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதுபோக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, வியட்நாம் நாடுகளுக்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

இரவில் அந்த கனவுகள் வருகிறதா?.. இதுதான் அர்த்தம்

image

நம்மில் பலருக்கும் இரவில் பேய் துரத்துவது போன்றும், பேய் நம்மை அமுக்குவது போலவும் கனவுகள் வரும். கனவு சாஸ்திரப்படி, கடந்த காலத்தில் செய்த செயலுக்கு நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால் பேய் கனவுகள் வருமாம். கடந்த கால நினைவுகளை மறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையே பேய் கனவுகள் உணர்த்துகின்றன. அதனால், அந்த மாதிரி கனவுகளுக்கு பயப்பட வேண்டாம். SHARE IT.

News December 8, 2025

ED ரகசிய கடிதம் தனிநபருக்கு வந்தது எப்படி?

image

நகராட்சி நிர்வாக துறையில் முறைகேடு நடந்ததாகவும், இதனை தமிழக DGP விசாரிக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த HC, டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறியது. பின்னர், இது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என TN அரசு தரப்பில் கோரப்பட்டது.

News December 7, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.

error: Content is protected !!