News March 24, 2024
ஜெர்மனிக்கு இந்தியா கடும் கண்டனம்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஃபிஷர் கூறிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் ஜெர்மனி அப்பட்டமாக தலையீடுவதாகவே கருதுகிறோம். இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை ஜெர்மனி கேள்வி கேட்பதை ஏற்க முடியாது. ஜெர்மனியின் அனுமானங்கள் அவசியமற்றவை” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
ஊளையிடும் நரிக்கு பதில் சொல்ல வேண்டுமா? வைகோ

பல நூறு கோடி சொத்துகளை வைகோ குவித்து விட்டதாக மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மல்லை சத்யா குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த வைகோ, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன் நான். அரசியலுக்கு வந்து பல சொத்துக்களை இழந்திருக்கிறேன். புனித இலக்கை நோக்கிய நெடுந்தூர பயணத்தில் இருக்கிறேன். அப்போது, ஒரு நரி ஊளையிட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்
News November 19, 2025
வைகுண்ட ஏகாதசிக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட்களை ஆன்லைனில் மட்டுமே வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பரமபத வாசல் தரிசனத்திற்கு, நேரடி டோக்கன்கள் வழங்கும் திட்டமில்லை என தேவஸ்தானம் கூறியுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில், தரிசனத்திற்கான டிக்கெட்களை குலுக்கல் முறையில் வழங்கவும் தீர்மானித்து உள்ளது.
News November 19, 2025
இந்த வங்கிக் கணக்குகள் நாளை முதல் இயங்காது

RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில், நவ.20 (நாளை) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


