News September 3, 2025

ஆப்கனுக்கு 21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா

image

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது. போர்வைகள், டெண்ட்டுகள், மருந்து பொருள்கள், தண்ணீர் டேங்கர்கள், வீல்சேர்கள், சானிட்டைசர் உள்ளிட்ட 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 8, ஐப்பசி 22 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 07:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை

News November 8, 2025

இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்போம்: CPM

image

வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு உள்ளதாக, CPM அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்துவது என்ற ஒரு அம்சத்தில் மட்டும்தான் திமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும், மற்ற விஷயங்களில் மாறுபட்ட கொள்கைகளே உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் CPM போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

ECI அதிகாரிகளுக்கு பிரியங்கா காந்தி பகிரங்க எச்சரிக்கை

image

பிஹாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ஞானேஷ் குமார் உள்ளிட்ட ECI தலைமை அதிகாரிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களின் வாக்குகளை திருடி துரோகம் இழைத்த ECI அதிகாரிகளை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், நிம்மதியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!