News March 23, 2024
அரபிக் கடலில் 10 போர் கப்பல்களை இறக்கிய இந்தியா

அரபிக் கடல், செங்கடல், ஏடன் வளைகுடா பிராந்தியத்தில் 10 போர் கப்பல்களை நிலைநிறுத்தி இருப்பதாக கடற்படைத் தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஆபரேசன் சங்கல்ப் கீழ், கடற்கொள்ளையர், ஏவுகணை, டிரோன் எதிர்ப்பு நடவடிக்கைக்காக 10 போர்க் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளோம். வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக கரையை அடைவதற்கான பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதே பணி” என்றார்.
Similar News
News November 10, 2025
பாமக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்.. பதற்றம்

சென்னை, தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்திற்கு மர்மநபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், அது புரளி என தெரியவந்தது. அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதுவும் புரளி என தெரியவந்தது.
News November 10, 2025
5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்காரணமாக தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
News November 10, 2025
காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யாதீங்க!

உணவு, வேலை என மாறி வரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, நமது உடலை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், நீங்கள் காலையில் எழுந்ததும் செய்யும் 5 விஷயங்கள் உங்கள் நாளை வெகுவாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, டாக்டர் பிரகாஷ் மூர்த்தி, காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத 5 விஷயங்களை பட்டியலிட்டுள்ளார். அதை மேலே தொகுத்துள்ளோம். Swipe செய்து தெரிஞ்சுக்கோங்க.


