News August 18, 2025
நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Similar News
News December 15, 2025
BJP-யையும் அரவணைப்போம், ஆனா ஒரு கன்டிஷன்: ரகுபதி

ஆள் இல்லாததால் அட்வான்ஸாகவே அதிமுக விருப்பமனு கேட்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். யாரும் கட்சியை விட்டு போகக்கூடாது என்பதால் அதிமுக முந்தியுள்ளதாக அவர் கூறினார். திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் எந்த கட்சியையும், ஏன் பாஜகவை கூட அரவணைப்போம் என ரகுபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், தலைவர் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் எங்களது அடுத்த தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 15, 2025
இரவு 10 மணிக்கு மேல் போனில் இத பார்த்தால் ₹1,000 அபராதம்

ரயிலில் இரவு நேரத்தில் பலர் போனில் சத்தமாக ரீல்ஸ் அல்லது யூடியூப் வீடியோ பார்த்தபடி பயணிப்பார்கள். அவர்களுக்கு அது பொழுதுபோக்கு என்றாலும், மற்றவர்களுக்கு எரிச்சல்தானே! ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் போனில் சத்தமாக வீடியோ பார்க்கவோ, சத்தமாக பேசவோ கூடாது என்ற சட்டமே உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ₹500- ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 15, 2025
இதுதான் தீபத்தூண்: போட்டோ சமர்பித்த அறநிலையத்துறை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மலைகளில் உள்ள தூண்களின் புகைப்படங்களை அறநிலையத்துறை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. மேலும், மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளதுதான் தீபத்தூண் என மக்கள் நம்புகிறார்கள்; அதில், நாயக்கர்களின் பெயர்களும், ஹனுமான் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனி நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ள தூணில் கடவுளின் உருவங்கள் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.


