News October 12, 2025

தீபாவளிக்கு இதை செய்தால் கண்டிப்பா ஜெயில்தான்!

image

தீபாவளி கொண்டாட்டத்தின் போது வேண்டுமென்றே விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்காதீங்க. அத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து புகாரளிக்கவும், காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கவும் ‘1962’ என்ற நம்பருக்கு அழைக்கலாம். எனவே எந்த ஜீவனுக்கும் இடையூறு செய்யாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள். SHARE.

Similar News

News December 12, 2025

ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கெளரவம்

image

சினிமாவில் பொன்விழா கொண்டாடியுள்ள ரஜினிகாந்துக்கு, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனை, அவரது மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். மேலும், நாளை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதே விழாவில் ‘பாட்ஷா’ சிறப்பு படமாக திரையிடப்படவுள்ளது. அத்துடன், ‘படையப்பா’ படம் நாளை ரீரிலீஸ் ஆகிறது. இதற்கான புரோமோஷனில் ரஜினியே களமிறங்கிய நிலையில், ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ளது.

News December 12, 2025

புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை பாயுமா?

image

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பின்போது, புஸ்ஸி ஆனந்த் டோக்கன் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க கோரினார். இது மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், போலீஸ் விதிகளை மீறி புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டிருந்தால், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தவெக வைத்த கோரிக்கைபடியே நிபந்தனைகளை விதித்தோம் என்றும் கூறினார்.

News December 12, 2025

கோர விபத்தில் 22 பேர் பலி.. PM மோடி இரங்கல்

image

அருணாசல பிரதேசத்தில் இந்திய – சீன எல்லையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் டிரக் கவிழ்ந்த <<18533109>>விபத்தில்<<>> 22 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் & காயமடைந்தோருக்கு ₹50 ஆயிரமும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!