News April 30, 2024
ஓய்வின்றி இரவு பகலாக உழைக்கிறேன்

நாட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த இரவு பகலாகத் தாம் பணியாற்றுவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டு மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரத் தாம் விரும்புவதாகவும், ஆனால் எதிர்க்கட்சியினரோ தம்மை மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் விமர்சித்தார்.
Similar News
News December 15, 2025
செல்போனில் இதை செய்தால் ஜெயில் தண்டனை

டிஜிட்டல் யுகத்தில், இருந்த இடத்திலேயே செல்போனில் எல்லாவற்றையும் அறியலாம். ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடிப் பார்த்தால் ஜெயில் தண்டனை கன்ஃபார்ம். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை ஹேக் செய்வது எப்படி என தேடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், குழந்தைகளின் ஆபாச படங்கள், காபிரைட்டை மீறி திரைப்படங்களை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றை செய்தாலும் நீங்கள் கம்பி எண்ணுவது உறுதி.
News December 15, 2025
ICC விருதை தட்டித் தூக்கிய இந்திய வீராங்கனை ஷெஃபாலி

ODI WC-ஐ இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஷெஃபாலி வர்மாவுக்கு, மகளிருக்கான ICC Player of the Month விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதிகா ராவலுக்கு காயம் ஏற்பட்டதால் அணியில் சேர்க்கப்பட்ட ஷெஃபாலி, WC ஃபைனலில் 87 ரன்கள், 2 விக்கெட்களை கைப்பற்றினார். அதேபோல், SA வீரர் சிமோன் ஹார்மருக்கு ஆண்கள் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. IND-க்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில், இவர் 17 விக்கெட்களை கைப்பற்றினார்.
News December 15, 2025
ராகுல் பற்றிய புகாரால் முக்கிய தலைவர் அதிரடி நீக்கம்

ராகுல் காந்தி குறித்து சோனியா காந்தியிடம் புகார் அளித்த ஒடிசா மூத்த தலைவரும் EX MLA-வுமான முகமது மொகிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 5 பக்க கடிதத்தில் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே இளைஞர்களுடன் இணைந்து செயல்படவில்லை. அவர்களால்தான் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் காங்கிரஸில் இருந்து விலகியதாக மொகிம் குற்றம்சாட்டியிருந்தார். இவ்விவகாரம் காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.


