News October 7, 2025

இறைவன் கட்டளையிட்டதால் CJI-ஐ தாக்கினேன்

image

SC-ல் தலைமை நீதிபதி கவாய்யை நான் தாக்கவில்லை, கடவுள்தான் செய்தார் என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறியுள்ளார். கடவுள் சிலையை சீரமைக்க கோரிய வழக்கில் <<17928577>>CJI-ன் கருத்து<<>> சனாதன தர்மத்தை கேலி செய்வதுபோல் இருந்ததாக கூறிய அவர், CJI-ஐ தாக்கியதால் தனக்கு பயமில்லை என கூறியுள்ளார். கவாய்யின் செயலுக்கு கடவுள் ஆற்றிய எதிர்வினை எனவும், இதை நினைத்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News November 16, 2025

பிரபல நடிகை காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

image

பிரபல பெங்காலி நடிகையான பத்ரா பாசு (65) கொல்கத்தாவில் காலமானார். கடந்த சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் பிரபல நாடக இயக்குநரும் நடிகருமான அசித் பாசுவின் மனைவியாவார். வங்கா நாடகம் மற்றும் சினிமா இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். அவரது மறைவிற்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News November 16, 2025

அதிசயமே அசந்து போகும் ராஷி கண்ணா

image

ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருகிறார். அரண்மனை 3&4 படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணாவுக்கு, பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது, பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களில், சிலை போல போஸ் கொடுத்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.

News November 16, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்றிரவோ (அ) நாளை காலையோ தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!