News August 8, 2024
கெளரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு வைக்காமல், அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 12, 2025
லோன் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

‘லோன் வேணுமா?’ என்று வரும் பல ஆபர்கள் மோசடிகள் தான். இவற்றில் சிக்காமல் தவிர்க்க: *உங்கள் நிதித் தகுதியைவிட மிகப் பெரிய தொகை, மிகக் குறைவான வட்டி -நம்பவே நம்பாதீங்க. *முன்தொகை கேட்டால் கொடுக்காதீர் *RBI-யில் பதிவு செய்யப்படாத வங்கி, நிதி நிறுவனங்களை தவிர்க்கவும் *பர்சனல் டேட்டா, சந்தேகமான ஆப் ஆக்சஸ் கேட்டால் கொடுக்க வேண்டாம் *இன்றைக்கே கடைசி, இல்லன்னா லோன் கிடைக்காது என்றால், ஏமாந்து விடாதீர்.
News November 12, 2025
டிச.17-ல் பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 17-ம் தேதி பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான பாமகவினர் கைதாக வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தற்போது வரை பாமகவிற்கும், ராமதாஸுக்கும் உண்மையாக உழைத்து வருவதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
News November 12, 2025
IPPB-ல் 309 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 309 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசோசியேட், அசிஸ்டண்ட் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 3 ஆண்டு பணி அனுபவம் தேவை. இதற்கு, வரும் டிச.1-ம் தேதிக்குள் https://ippbonline.bank.in/ தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


