News August 20, 2024
‘வாழை’ பார்த்த பிறகு மனது கனத்தது: ஹரிஷ் கல்யாண்

‘வாழை’ படம் பார்த்த பிறகு மனசு பாரமாக இருந்ததாக நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார். இவ்வளவு நெருக்கமான, உருக்கமான விஷயத்தை எப்படி தாங்குறீங்க என மாரி செல்வராஜிடம் தான் நேரில் வியந்து கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படம் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று திரையிடப்பட்டது. இப்படம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
Similar News
News January 25, 2026
44 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கங்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு 44 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கங்கள் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் சிறப்பு செயலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. விருதை பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம், ₹25,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
44 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கங்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு 44 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கங்கள் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் சிறப்பு செயலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. விருதை பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம், ₹25,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
ரஜினி வாழ்த்திய பரோட்டா கடைக்காரர்!

நடிகர் ரஜினி தனது தீவிர ரசிகரான ‘ரஜினி’ சேகர் என்பவரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். மதுரையில் ‘₹5 பரோட்டா கடை’ நடத்தி வரும் ரஜினி சேகர், அப்பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயம். கையில் ‘ரஜினி’ சேகர் என பச்சை குத்திக்கொண்டுள்ள இவரை, ‘தலைவர்’ என்றே அப்பகுதியினர் அன்போடு அழைக்கின்றனர். என்றாவது ரஜினியை சந்தித்துவிட மாட்டோமா என ஏங்கியவரை குடும்பத்துடன் நேரில் வரவழைத்து பாராட்டி இருக்கிறார் ரஜினி.


