News June 2, 2024
13 நாள்கள் மட்டுமே இந்திய பிரதமராக இருந்தவர்

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு 1964 மே 27ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இடைக்கால பிரதமராக காங்கிரஸ் எம்பி குல்சாரிலால் நந்தா மே 28ஆம் தேதி முதல் ஜுன் 9ஆம் தேதி வரை 13 நாள் பதவி வகித்தார். பின்னர் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி 1966 ஜன. 11இல் மரணமடையவே, குல்சாரிலால் நந்தா மீண்டும் ஜன.12- 24 வரை 13 நாள்கள் பதவி வகித்தார். அதாவது 2 முறையும் 13 நாள்கள் பிரதமராக பணியாற்றினார்.
Similar News
News July 11, 2025
மாலை 5 மணிக்கு.. சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு

தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் சபரிமலையின் மாளிகப்புரத்தம்மன் கோயிலில் நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதன் பிரதிஷ்டைக்காக, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஞாயிறு காலை 11 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்.
News July 11, 2025
பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம்!

இந்தியப் பங்குச்சந்தைகள் 2-வது நாளாக இன்றும்(ஜூலை 11) சரிவைக் கண்டுள்ளன. வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 249 புள்ளிகள் சரிந்து 82,941 புள்ளிகளிலும், நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 25,288 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. குறிப்பாக TCS, Infosys, Tech Mahindra உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News July 11, 2025
வைகோ அல்ல ‘பொய்கோ’: வைகைச்செல்வன் விளாசல்

திருச்சி திமுக மாநாட்டிற்குச் செல்லாமல், போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்ததே அரசியல் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு என <<17024276>>வைகோ<<>> பேசியிருந்தார். இந்நிலையில், மதிமுகவின் பம்பரம் சின்னத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர உழைத்தது அதிமுக என்பதை அவர் மறந்திடக்கூடாது என வைகைச்செல்வன் கூறியுள்ளார். அவர் வைகோ அல்ல, ‘பொய்கோ’ என்றே அழைக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.