News October 13, 2025
20 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பு

காசா அமைதிக்கான உச்சி மாநாடு, இன்று எகிப்தில் நடைபெறுகிறது. முன்னதாக, போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து, 20 இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் இன்று விடுவித்துள்ளது. ஏற்கெனவே 20 பணயக் கைதிகளின் பட்டியல் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் காசாவிலிருந்து ரெட் கிராஸ் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
Similar News
News November 15, 2025
பிஹாரை போல TN-ல் வெல்ல முடியாது: வைகோ

சுயேட்சை வேட்பாளர்கள் அதிகம் போட்டியிட்டதால் தான் வாக்குகள் பிரிந்து, பிஹாரில் NDA கூட்டணி வெற்றி பெற்றதாக வைகோ கூறியுள்ளார். பிஹார் போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுவிடலாம் என NDA கூட்டணி நினைத்தால், அது நடக்காது என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய மோசடிதான் SIR என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 15, 2025
₹64.3 கோடியுடன் டாப்பில் உள்ள கொல்கத்தா

IPL அணிகள் தங்கள் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று மாலை வெளியிட்டது. இதில் KKR அணி 10 வீரர்கள் விடுவித்ததன் மூலம், அதிகபட்சமாக ₹64.3 கோடியை தன்வசம் வைத்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் CSK (₹43.4 கோடி), SRH (₹25.5 கோடி) LSG (₹22.9 கோடி), DC(₹21.8 கோடி), RCB (₹16.4 கோடி), RR (₹16.05 கோடி) , GT(12.9 கோடி), PBKS(₹11.5 கோடி), MI (₹2.75 கோடி) அகிய அணிகள் உள்ளன.
News November 15, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை… சூப்பர் அப்டேட்

நவம்பரில் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.15 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். தேர்வுக்கான அட்டவணையை விரைவில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது.


