News February 25, 2025
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஞானேஷ் குமார்

சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். கும்பமேளாவில் நீராடியது உணர்வுப்பூர்வமாகவும், மனநிறைவை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News April 14, 2026
ஏப்.16-ல் தவெக தேர்தல் அறிக்கை ரிலீஸ்

மகளிருக்கு மாதம் ₹2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என TVK தேர்தல் வாக்குறுதிகளை பகுதி பகுதியாக விஜய் அறிவித்து வருகிறார். இந்நிலையில், தவெகவின் முழு தேர்தல் அறிக்கை ஏப்.16-ல் வெளியிடப்படும் என அவர் கூறினார். இதனிடையே திருப்பூர் பரப்புரையில், அரசுத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அவர் வாக்குறுதி தந்துள்ளார்.
News April 14, 2026
போரினால் ₹25 லட்சம் கோடி இழப்பு: ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான 40 நாள் போரினால் தங்களுக்கு ₹25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது ஆரம்பகட்ட மதிப்பீடு மட்டுமே என்றும், விரிவான சேத மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இழப்பு இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், இதற்கான இழப்பீட்டு தொகையை சவுதி, UAE, பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிடம் ஈரான் கோரியுள்ளது.
News April 14, 2026
ராக்கெட் லாஞ்சர் வெடித்து மாணவர் பலி

செங்கல்பட்டில் உள்ள ராணுவ துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் அருகே ராக்கெட் லாஞ்சர் வெடித்து மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மலைக்கு 6 கல்லூரி மாணவர்கள் டிரெக்கிங் சென்றபோது, அங்கு கிடந்த ராக்கெட் லாஞ்சர் மீது கால் வைத்தபோது வெடித்ததில் பெங்களூருவை சேர்ந்த எமன்சு யாதவ் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


