News September 4, 2025
GST எதிரொலி: உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை

தீபாவளி பரிசாக மத்திய அரசு GST வரம்பில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயர்ந்து 81,100 புள்ளிகளிலும், Nifty 24,900 புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாகின்றன. Bajaj Finance, Maruti Suzuki, HDFC வங்கிகளின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அதேநேரம், Reliance, TATA Steel, JSW Steel பங்குகள் சற்று சரிவை சந்தித்துள்ளன.
Similar News
News November 12, 2025
30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலி

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலியானதாக ‘The Climate Risk Index’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், டொமினிகா, மியான்மர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. மேலும், 1995 முதல் 430 பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News November 12, 2025
‘தற்குறி’ என சொல்லாதீங்க: எழிலன்

ஒரு சாராரை ‘தற்குறி’ என திமுகவினர் விமர்சிக்கின்றனர். இந்நிலையில், ‘தற்குறிகள்’ என விமர்சனம் செய்வது தவறான அணுகுமுறை என்று திமுக MLA எழிலன் தெரிவித்துள்ளார். நாம் அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை, உரையாடவில்லை; அது நம்முடைய தவறு என்று கூறினார். மேலும், அவர்கள் சங்கிகள் கிடையாது; அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசினால்தான் போலியான தலைவர்களைப் பற்றி உணர்வார்கள் எனவும் ஆலோசனை வழங்கினார்.
News November 12, 2025
CSK அணி 6 வீரர்களை கழட்டி விட திட்டம்

நவம்பர் 15-ம் தேதிக்குள் IPL அணிகள் தக்கவைப்படும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும். இதனால் அந்த பட்டியலை தயார் செய்யும் பணியில் அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன. இதனிடையே CSK அணி டிரேட் மூலம் சஞ்சுவை வாங்க உள்ள நிலையில், 6 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கான்வே, திரிபாதி, ஹூடா, ராமகிருஷ்ண கோஷ், குர்ஜப்னீத் உள்ளிட்டோரை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


