News October 1, 2025
செப்டம்பரில் ₹1.89 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

செப்டம்பர் மாதத்தில் ₹1.89 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது 2024 செப்டம்பரை காட்டிலும் 9.1% அதிகமாகும். அதேபோல், தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ₹1.8 லட்சம் கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. நடப்பு நிதியாண்டு தொடங்கிய கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டும் ₹10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்ட ஜிஎஸ்டி வசூலை காட்டிலும் 9.9% அதிகமாகும்.
Similar News
News December 12, 2025
காஞ்சி: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 வரை மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News December 12, 2025
கேள்விகளுக்கு பதில் எங்கே? சு.வெங்கடேசன்

மதுரை, கோவை மெட்ரோ குறித்த கேள்விக்கு, மத்திய அரசு சரியான பதிலை அளிக்கவில்லை என MP சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும், மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு, ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை’ என்பது போல, PM E-Seva குளிரூடப்பட்ட பேருந்து திட்டம் பற்றி பதில் கூறுவதாக விமர்சித்துள்ளார்.
News December 12, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்று(டிச.12) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹1,600 உயர்ந்து ₹98,000-க்கும், 1 கிராம் தங்கத்தின் விலை ₹200 அதிகரித்து ₹12,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரனுக்கு ₹160 மட்டுமே உயர்ந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


